முதுகலையாசிரியர்களே,
இனி ஊதிய முரண்பாடு சார்ந்து எந்த கோரிக்கையும் ஏற்கப்படாது என்று ஒரு அரசாணை கடந்த சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் நமது ஊதிய வழக்கு என்ன ஆகும் என பல நண்பர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அரசணை 234. நாள் 1.06.2009 செல்லாது என அறிவிக்க கோரிதான் நாம் நீதிமன்றம் சென்றுள்ளோம். மேலும் நமது வழக்கு ஜனவரி 2015 லேயே அனுமதிக்கப்பட்டது. 10.07.2015 தேதியிட்ட அரசாணை நமது வழக்கையோ, கோரிக்கையையோ கட்டுப்படுத்தாது.மேலும் அரசு வெளியிடும் அரசாணைகள் அனைத்தும் அரசியல் அமைப்பு சட்டத்திற்குட்பட்டதல்ல. எப்படி ஒரு ஊழியரின் கோரிக்கை அல்லது ஊழியர் சங்கங்களின் கோரிக்கையை ஒரு அரசு இனி ஏற்க முடியாது என அறிவிக்க முடியும். தேவைப்பட்டால் இந்த அரசாணையை நீக்க சொல்லி கூட நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கலாம். அதனால் கவலையோ குழப்பமோ வேண்டாம். நாம் வெல்வது உறுதி
சீனிவாசன்,
மாநில சட்ட செயலாளர்
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் (TNHSPGTA)
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.