தமிழ் மொழி மறைந்து வருவதை இளைஞர்கள் தடுக்க வேண்டும் என விரும்பியவர் அப்துல்கலாம்
இந்தியாவி்ன் முன்னாள் குடியரசுத் தலைவரும், விஞ்ஞானியுமான டாக்டர்.ஆ.ப.ஜே.அப்துல்கலாம் அவர்கள் நேற்று காலமானார். இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் பலவும் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், அப்துல்கலாம் அவர்களின் கல்லூரி நண்பர் சம்பத்குமார் (84) கலாமை பற்றி கூறியவை பின்வருமாறு:-
தமிழ் மொழி மறைந்து விடாமல் தடுக்க இளைய தலைமுறை முன்வர வேண்டும் என விரும்பியவர் அப்துல்கலாம். இன்றைய இளைய தலைமுறை தமிழ் மொழியில் அதிக அளவில் ஆர்வம் காட்டாமல் இருப்பது குறித்து அவர் அதிகம் கவலை கொண்டார்.
இவ்வாறு சம்பத்குமார் தெரிவித்தார்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.