10 ஆண்டுகளுக்கு ஒருமுறை பாடம்
நீர்நிலைகளை துார்வாரும் பணிகளில், மக்களும் அக்கறை காட்ட வேண்டும். அந்த காலத்தில், குடி மராமத்து என்ற முறை இருந்தது; உள்ளூர் பஞ்சாயத்து மூலம் துார்வாரும் நடவடிக்கை நடைபெற்றது; இப்போது அவ்வாறு இல்லை. மக்கள்தொகை, குடியிருப்புகளுக்கு ஏற்ப, மழை நீர் வடிகால்களை அதிகப்படுத்தி, பராமரிப்பை தொடர வேண்டும். மேலும், 1985, 1995, 2005 மற்றும் 2015 என, ஒவ்வொரு, 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை, இத்தகைய பேரிடர் வந்து கொண்டு தான் இருக்கிறது. எனவே, இயற்கை கற்றுத்தரும் பாடங்களுக்கு பிறகாவது நாம் விழித்துக் கொள்ள வேண்டும்.- மாதவி கணேசன் நீர் மேலாண் துறைத் தலைவர், அண்ணா பல்கலை
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.