ஒரு வார விடுமுறை பள்ளிகளுக்கு தேவை
சென்னை வெள்ளப்பெருக்கில், லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியரின் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், ஸ்டேஷனரி பொருட்கள் வெள்ளத்தில் நாசமாகி விட்டன.இதற்கிடையில், வெள்ள பகுதியில் குப்பை மற்றும் கழிவு நீரால் நோய் பரவும் ஆபத்து உள்ளதால், பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு தடுப்பூசி போடவும், நோய்த் தடுப்பு மருந்துகள் கொடுக்கவும் வேண்டியுள்ளது. பல இடங்களில் பள்ளிகளும், ஆசிரியர்களும் கடுமையாக வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, நிவாரணப் பணிகளுக்கு ஏதுவாக, பள்ளி, கல்லுாரி திறப்பை ஒரு வாரம் தள்ளிப்போட, பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.