!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

புதன், 23 டிசம்பர், 2015

தேர்வில் தோல்வி அடைந்த விரக்தியில் பெற்றோர் உள்பட 22 பேரை வாளால் வெட்டிய வாலிபர் போலீசார் சுட்டுக்கொன்றனர்
தெலுங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தில் உள்ள லட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் பல்விந்தர் சிங் என்ற பப்லூ(வயது 24). இவர் பெங்களூருவில் உள்ள மின்னணு உபகரணங்கள் தயாரிக்க கூடிய தொழிற்சாலையில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார்.
சமீபத்தில் நடந்த சிவில் சர்வீசஸ் தேர்வில் தோல்வி அடைந்ததால் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்து வந்த அவர் கடந்த ஒரு மாதமாக மனநோயுக்கான சிகிச்சை பெற்று வந்தார்.


இந்த நிலையில் நேற்று அதிகாலையில் அவர் தனது பெற்றோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் ஆத்திரமடைந்த பப்லூ திடீரென அருகில் இருந்த வாளை எடுத்து இருவரையும் சரமாரியாக வெட்டினார். இருவரும் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தனர்.
இதையடுத்து அவர் வீதிக்கு ஓடி வந்து தனது கண்ணில் பட்ட அனைவரையும் சரமாரியாக வெட்டினார். இதில் ஒரு ஆட்டோ டிரைவர் உள்பட 22 பேர் காயம் அடைந்தனர்.

இது குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அப்போது போலீசார் அவரை வாளை கீழே போடும் படி எச்சரித்தனர். ஆனால் அவரோ அதை மறுத்ததோடு, போலீசாரையும் தாக்கினார். இதில் 2 போலீசார் காயம் அடைந்தனர்.
இதையடுத்து அசம்பாவிதத்தை தவிர்க்க போலீஸ் இன்ஸ்பெக்டர் பப்லூவை துப்பாக்கியால் சுட்டார். இதில் அவரது உடலில் குண்டு பாய்ந்து, சுருண்டு விழுந்தார்.
பின்னர் போலீசார் அவரை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பப்லூ உயிரிழந்தார்.
பப்லூ வெட்டியதில் காயமடைந்தவர்கள் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். அவர்களில் 5 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png