3ம் பருவ பாடபுத்தகங்கள் வினியோகிக்க ஏற்பாடு
தமிழக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடபுத்தகங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதில், மூன்றாம் பருவத்திற்கான பாட புத்தகங்கள் அனைத்தும் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, கரூர் மாவட்டத்தில் உள்ள, 140 பள்ளிகளுக்கு, மொத்தம், 30 ஆயிரத்து, 746 புத்தகங்கள் வினியோகம் செய்யப்படும். இதுகுறித்து முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி கூறியது: விடுமுறை முடிந்து, ஜன., 2ம் தேதி பள்ளி மாணவ, மாணவியருக்கு புத்தகங்கள் கிடைக்க ஏற்படுகள் நடந்து வருகிறது. இதையொட்டி கரூர் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலிருந்து, அனைத்து பள்ளிகளுக்கும் புத்தகங்களை அனுப்பும் பணி தீவிரமாக நடக்கிறது, என்றார்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.