சாவிலும் பிரியாத ஆசிரிய தம்பதி
ங்காரத்தோப்பைச் சேர்ந்தவர் ஆஸ்டின் வேதமுத்து, 88. முதுகலை பட்டதாரி. மதுரை அமெரிக்கன் கல்லுாரியில் பேராசிரியராக பணியாற்றினார். பெங்களூரூவைச் சேர்ந்தவர் பிரிடா , 84. முதுகலை பட்டதாரி. மதுரை லேடி டோக் கல்லுாரியில் பேராசிரியையாக பணியாற்றினார். இருவரும் காதலித்து 1956 மே மாதம் ராமநாதபுரத்தில் பெற்றோர் சம்மதப்படி திருமணம் செய்து கொண்டனர். இதன்பின் பணியில் இருந்து விலகிய இருவரும் 1968ல் கனடா சென்றனர். அங்கு ஒரு பள்ளியில் இருவரும் உடற்கல்வி ஆசிரியர்களாக பணியாற்றி ஓய்வு பெற்றனர்.
2006 லிருந்து ராமநாதபுரம் அருகே பிரப்பன்வலசையில் அவரது தம்பி ஸ்டீபன் ஜெயசீலனுடன் ஆஸ்டின் தம்பதியினர் வசித்து வந்தனர். வயோதிகம் காரணமாக இருவருக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இந்நிலையில் டிச., 12 இரவு 8.30 மணிக்கு பிரிடா ஆஸ்டின் இறந்தார். நேற்று காலை 8 மணிக்கு உடல் அடக்கம் செய்ய முடிவு செய்திருந்தனர்.
மனைவி இறந்த சோகத்தில் இருந்த ஆஸ்டின் வேதமுத்து டிச., 13 இரவு 8.30 மணிக்கு இறந்தார். இருவரின் உடல்களும் ராமநாதபுரத்தில் அடக்கம் செய்யப்பட்டன.ஸ்டீபன் ஜெயசீலன் கூறுகையில்,“ காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதியினர் இருவரும் 59 ஆண்டுகள் இணைபிரியாமல் ஒற்றுமையாக இருந்தனர். இருவருக்கும் இடையே சிறு பிரச்னைகள் கூட வந்ததில்லை. குழந்தை இல்லாத குறை ஒன்றுதான். எங்கு சென்றாலும் சேர்ந்து சென்ற அவர்கள் இறப்பிலும் பிரியாமல் சென்று விட்டனர்,” என்றார்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.