பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி
திப்பம்பட்டி, எறகுண்டனஹள்ளி குறுவள மையங்களில், பள்ளி மேலாண்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி நடந்தது. திப்பம்பட்டியில் நடந்த பயிற்சியில், 16 பள்ளிகளின் மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும், 90 தலைமையாசிரியர்களுக்கு, ஆசிரியர் பயிற்றுனர் ராஜசேகரி, மற்றும் வி.பள்ளிப்பட்டி பள்ளி தலைமை ஆசிரியர் குமார் ஆகியோர் பயிற்சி அளித்தனர். மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மணி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் தமிழ்செல்வன், குறுவள மைய ஒருங்கிணைப்பாளர் சிவலிங்கம் ஆகியோர் பயிற்சியின் நோக்கங்கள் குறித்து கூறினர். எறகுண்டனஹள்ளி குறுவள மையத்தில் நடந்த பயிற்சி முகாமை, வட்டார வள மைய மேற்பார்வையாளர் சுகுணா துவக்கி வைத்தார். பயிற்சியில், 13 பள்ளிகளிலிருந்து, 78 மேலாண்மை குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம், குழந்தைகளின் உரிமைகள் குறித்து பயிற்சி வழங்கப்பட்டது.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.