அமைச்சர், எம்.எல்.ஏ.,க்களுக்கு காத்திருந்த லேப் - டாப்கள் நாசம்
அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களுக்காக, மாணவர்களுக்கு வழங்கப்படாமல் காத்திருந்த இலவச, 'லேப் - டாப்'கள் மற்றும் புத்தகங்கள் வெள்ளத்துக்கு சேதமாகியுள்ளன.
சென்னை, அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், சான்றிதழ் பண்டல்கள், கோப்புகள் வெள்ளத்தில் நாசமாகி விட்டன.எம்.ஜி.ஆர்., நகர் மேல்நிலைப் பள்ளி, புளியந்தோப்பு அம்மையம்மாள் பள்ளி, ஜாபர்கான்பேட்டை சென்னை பள்ளி, மேற்கு மாம்பலத்தில் உள்ள பல பள்ளிகளிலும், ஆவணங்கள் சேதமடைந்துள்ளன. செங்குன்றம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் புகுந்த வெள்ளம், இலவச புத்தகங்கள், மடிக்கணினிகளை பதம் பார்க்கத் தவறவில்லை. இதில் மடிக்கணினிகள், அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் மூலம் புகைப்படம் எடுத்த பின், மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என, இரண்டு மாதமாக காத்திருந்து, தற்போது வெள்ளத்துக்கு சேதமாகி விட்டன. மேலும், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்களின் தொகுதியில் உள்ள பள்ளிகளில்,மடிக்கணினிகள் மற்றும் இலவச பொருட்கள், இதுவரை மாணவர்களுக்கு வழங்கப்படாமல் சேதமடைந்து விட்டன
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.