அரையாண்டு தேர்வு உண்டு ஜன., 11ல் துவங்குகிறது!
ஒன்று முதல், பிளஸ் 2 வரையிலான அனைத்து வகுப்புகளுக்கும், ஜன., 11 முதல், 27 வரை, அரையாண்டு தேர்வு நடக்கும் என, தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்து உள்ளது. டிசம்பரில் நடக்க வேண்டிய பள்ளி அரையாண்டு தேர்வுகள், கன மழை காரணமாக, ஜனவரிக்கு தள்ளி வைக்கப்பட்டன. அதன்படி, ஜன., 11 முதல், 27 வரை இத்தேர்வுகள் நடத்தப்படும் என, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அறிவித்து உள்ளார்.
அதன் விவரம்:அரையாண்டு தேர்வின் இடையே, பொங்கல் பண்டிகை வருகிறது. இதில், கல்வியாண்டு காலண்டர் படி, ஜன., 15, 16, 17 ஆகிய நாட்களில், பொங்கல் பண்டிகைக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, 18ம் தேதி மீண்டும் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.இவ்வாறு, அவர் அறிவித்து உள்ளார்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.