'நெட் ஒர்க்' போச்சுநிர்வாக பணிகள் சுணக்கம்
சென்னை தலைமைச் செயலகத்தில், அனைத்து மாவட்டங்களையும் இணைக்கும் சர்வரில் பழுது ஏற்பட்டுள்ளதால், மாவட்ட நிர்வாகப் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
மாவட்ட கலெக்டர் அலுவலகங்களை ஒருங்கிணைக்கும், 'சர்வர்' இணைப்பு, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ளது. துறைவாரியான உத்தரவுகளை மாவட்டங்களில் செயல்படுத்தவும், அனைத்து மாவட்டங்களை ஒருங்கிணைத்து, 'வீடியோ கான்பரன்சிங்' கலந்துரையாடல் நடத்தவும், 'சர்வர்' இணைப்பு முக்கியம்.
வெள்ள பாதிப்பால் பழுதடைந்த தலைமை செயலக, 'சர்வர்' இணைப்பு, இன்னும் சரி செய்யப்படவில்லை. இதனால், மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில், நிர்வாகம் தொடர்பான பணிகள் முடங்கியுள்ளன. 'எல்காட்' மையங்களில், ரேஷன் கார்டு அச்சடிப்பு, சரிபார்ப்பு தடைபட்டுள்ளன.
அரசு அதிகாரிகள் கூறியதாவது:அரசு சார்ந்த எந்தப் பணியாக இருந்தாலும், சென்னை உயரதிகாரிகளிடம் துறை சார்ந்த அனுமதி பெற்று, அதன்பின்னே நாங்கள் பணி மேற்கொள்ள வேண்டும். 'சர்வர்' பிரச்னையால், எழுத்துப்பூர்வமான அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. எந்தவிதமான பணிகளையும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 'சர்வர்' பழுது நீக்கப்பட்டால் மட்டுமே, இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.
இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.