!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

புதன், 9 டிசம்பர், 2015

சாதி சான்றிதழை ஆய்வு செய்யாத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை
எஸ்.சி., மற்றும் எஸ்.டி, சாதிச் சான்றிதழ்களை ஆய்வு செய்யாத அதிகாரிகள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும்' என, மத்திய அரசு எச்சரித்துள்ளது. மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சி துறை அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது:



மத்திய, மாநில அரசு வேலைகளில் சேருவோர், பொய்யான சாதிச் சான்றிதழ் அளித்து, எஸ்.சி., - எஸ்.டி., மற்றும் ஓ.பி.சி.,யினருக்கான பிரிவில் வேலை பெறுவதாக, தொடர்ந்து புகார்கள் வருகின்றன. இந்த மோசடியை தடுப்பதற்கு, கடுமையான நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. வேலைக்கு சேருவோர் சாதிச் சான்றிதழ் கொடுத்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அவற்றை முறையாக ஆய்வு செய்து, அந்த சான்றிதழ் உண்மையானதா என்பதை, குறித்த காலத்துக்குள் உறுதி செய்ய வேண்டும். இந்த நடவடிக்கையை முறையாக மேற்கொள்ளாத அதிகாரிகள் மீது, ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டு உள்ளது. மத்திய அரசின் அனைத்து துறைகளும், மாநில அரசுகளும், இது தொடர்பான தங்கள் கருத்துகளை, வரும், ஜன., 8க்குள் தெரிவிக்க வேண்டும். 
இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. 

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png