டிஜிட்டல் நூலகம் மீண்டும் திறப்பு
கடந்த ஆட்சியில், சென்னை கோட்டூர்புரத்தில், 178 கோடி ரூபாய் செலவில், அண்ணா நுாற்றாண்டு நுாலகம் கட்டப்பட்டது.இதில், மூன்றாவது மாடியில், 'டிஜிட்டல்' நுாலகம் உள்ளது. மொத்தம், 50 கணினிகள் மூலம் மாணவர்கள், 'இ - லேர்னிங்' எனப்படும் இணைய வழியில் நுால்களை படிக்கலாம்.இந்த நுாலகம் நான்கு ஆண்டுகளாக இயங்காமல், பாழடைந்து கிடந்தது. தற்போது, உயர் நீதிமன்ற உத்தரவுபடி, டிஜிட்டல் பிரிவுக்கு புத்துயிர் கிடைத்தது. அங்குள்ள, 30 கணினிகளுக்கு மட்டும் இணைய இணைப்பு தரப்பட்டது.
இதையடுத்து, டிஜிட்டல் நுாலக பிரிவு, நேற்று முதல் வாசகர்கள் பயன்பாட்டுக்கு வந்தது. முதல் மூன்று நாட்கள், சோதனை முறையில், குறைந்த எண்ணிக்கையில் வாசகர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். அடுத்த வாரம் முதல், முழு அளவில் அனைத்து கணினிகளும் செயல்பட துவங்கும் என, நுாலக வட்டாரங்கள் தெரிவித்தன.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.