வேலைவாய்ப்பு மையங்களில் வேலை கேட்டு 4 கோடி பேர் பதிவு
வேலை கேட்டு, வேலைவாய்ப்பு மையங்களில் பதிவு செய்துள்ள, நான்கு கோடி பேரின் விவரங்களும், மத்திய அரசு துவங்கியுள்ள வேலைவாய்ப்பு இணையதளத்தில் இணைக்கப்படுகிறது.
இது குறித்து, மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை முதன்மை ஆலோசகர் பி.பி.மித்ரா கூறியதாவது: வேலைவாய்ப்பு பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், ஜூலை மாதம் துவங்கப்பட்ட இணையதளத்தில், நாடு முழுவதும் வேலைவாய்ப்பு பதிவு அலுவலகங்களில் பதிவு செய்துள்ள, நான்கு கோடி பேரின் தகவல்களும் இணைக்கப்படுகிறது; அதேபோல், வேலை அளிக்க முன்வந்து, ஒன்பது லட்சம் நிறுவனங்களும் பதிவு செய்துள்ளன.
இதைத்தவிர, அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு என, தனி அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது. வேலை பார்ப்பவர்களில், 93 சதவீதம் பேர் அமைப்பு சாரா துறைகளில் உள்ளனர். அவர்களுக்கு அரசின் திட்டங்கள், பயன்கள் உள்ளிட்டவை கிடைக்கும் வகையில், அமைப்புசாரா தொழிலாளர் அடையாள எண்ணும், அட்டையும் வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.