ராமநாதபுரத்தில் ஆசிரியரை தாக்கிய 6ம் வகுப்பு மாணவி
ராமநாதபுரத்தில் ஆசிரியரை தாக்கிய 6ம் வகுப்பு மாணவி
ராமநாதபுரம் அருகே தாய் கொடுத்த ஆயுதத்தால் ஆசிரியரை மாணவி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 6ம் வகுப்பு மாணவி ஒருவர் மதிய உணவுக்காக வீட்டிற்கு சென்று தாமதமாக பள்ளிக்கு திரும்பியுள்ளார். இதனால் அந்த மாணவியை ஆசிரியர் கண்டித்ததுடன், தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது.
அப்போது திடீரென மாணவி தனது பையில் மறைத்து வைத்து இருந்த இரும்பு கம்பியால் ஆசிரியரை தாக்க முயன்றுள்ளார். இது குறித்து பள்ளி பேராசிரியர் அளித்த புகாரின் பெயரில் மாணவி மற்றும் அவரது தாயையும் விசாரணைக்காக காவல்துறையினர் அழைத்து சென்றனர்.
விசாரணையில் தனது மகளின் பாதுகாப்பு கருதி தாய் கொடுத்தனுப்பிய இரும்பு கம்பியாலேயே அந்த மாணவி ஆசிரியரை தாக்கியது தெரிய வந்தது. எனினும் மாணவியின் எதிர்கால நலன் கருதி வழக்குப்பதிவு செய்யாமல் அவர்கள் இருவரையும் காவல்துறையினர் எச்சரித்து அனுப்பினர்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.