மக்கள் நலக்கூட்டணிக்கு ஆதரவுஅரசு ஊழியர் சங்கம் திடீர் அறிவிப்பு
'புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும்' என்பது உள்ளிட்ட, 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த, 10ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில், அரசு ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.ஆதரித்து பேச்சுதிருவண்ணாமலையில் நடந்த மறியல் போராட்டத்தில், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலர் பாஸ்கரன் பேசுகையில், ''அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற, தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., முன்வரவில்லை. இந்த இரண்டு கட்சிகளுமே, அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் வஞ்சித்து வருகின்றன. எனவே, வரும் தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியை ஆதரிப்போம்,'' என்றார்.
அரசு ஊழியர் சங்க போராட்டத்தில், மாவட்ட செயலர் பொறுப்பு வகிக்கும் ஒருவர், இப்படி திடீரென அறிவிப்பு செய்தது, போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இடையே சலசலப்பை ஏற்படுத்தியது.கருணாநிதிக்கு கண்டனம்அரசு ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு, பணிக்கு திரும்ப வேண்டும் என்று, தி.மு.க., தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மறியல் போராட்டத் தில் ஈடுபட்டவர்கள், 'அரசு ஊழியர்கள் போராட்டமும், திசை திருப்ப முயலும் கருணாநிதியும்' என்ற தலைப்பில் துண்டு பிரசுரங்களை, பொதுமக்களிடம் வழங்கினர்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.