8 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு முதன்மைச் செயலாளர் அந்தஸ்து: தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் உத்தரவு
செயலாளர் நிலையில் இருந்த எட்டு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு முதன்மைச் செயலாளர் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தலைமைச் செயலாளர் கே.ஞானதேசிகன் வியாழக்கிழமை வெளியிட்ட உத்தரவு:
ஜெ.ராதாகிருஷ்ணன் (சுகாதாரத் துறை), ராஜேந்திர குமார் (இளைஞர் நலன்-விளையாட்டு மேம்பாட்டுத் துறை), நீரஜ் மிட்டல் (உலக வங்கி நிர்வாக இயக்குநரின் மூத்த ஆலோசகர்), ராஜேஷ் லக்கானி (தலைமைத் தேர்தல் அதிகாரி), மங்கத் ராம் சர்மா (தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை நிர்வாக இயக்குநர்), பிரதீப் யாதவ் (விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர்), குமார் ஜயந்த் (தொழிலாளர் நலன்-வேலைவாய்ப்புத் துறை), கே.கோபால் (மத்திய அரசின் ஜவுளித் துறை ஆணையாளர்) ஆகிய எட்டு அதிகாரிகள் செயலாளர் நிலையில் இருந்து முதன்மைச் செயலாளர் அந்தஸ்து நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் 1992-ஆம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் ஆவர்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.