சத்துணவு மையத்தை ஒப்படைக்க மறுப்பு மாணவர்களுக்கு உணவு வழங்குவதில் சிக்கல்
இன்று முதல் வேலைநிறுத்தம் செய்யும் சத்துணவு ஊழியர்கள், மையங்களை பள்ளி தலைமைஆசிரியர்களிடம் ஒப்படைக்க மறுத்துவிட்டதால் மாணவர்களுக்கு உணவு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் இன்று முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இதில் சத்துணவு ஊழியர்களும் ஈடுபடுவதால் பள்ளி மாணவர்களுக்கு உணவு வழங்குவதில் சிக்கல் ஏற்படாமல் இருக்க சத்துணவு மையங்களின் சாவியை தலைமைஆசிரியர்களிடம் ஒப்படைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.ஆனால் சத்துணவு ஊழியர்கள் சாவியை ஒப்படைக்க மறுத்துவிட்டனர். ராமநாதபுரம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் முழுமையாக சத்துணவு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் பள்ளி மாணவர்களுக்கு உணவு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சத்துணவு ஊழியர் சங்க நிர்வாகிகள் கூறுகையில், “சத்துணவு மையத்தை மற்றவர்களிடம் ஒப்படைத்தால் அரிசி, எண்ணெய் போன்ற பொருட்களில் எடை குறைய வாய்ப்புள்ளது. இதனால் நாங்கள் மைய சாவியை ஒப்படைக்கவில்லை,” என்றனர்.சத்துணவுத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “சத்துணவு மையங்களை திறக்க மாற்று நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.