வருவாய்த்துறையினர் போராட்டம்புது அரசாணை வெளியீடு
வருவாய்த்துறையினர் போராட்டத்தால் சில பதவிகளுக்கு பெயர் மாற்றம் செய்து புதிய அரசாணை வெளியிடப்பட்டது.வருவாய்துறையில் 8 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்புவது, ஊதிய உயர்வு உள்ளிட்ட 19 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் பிப்., 2, 3 வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதில் தாசில்தார் முதல் அலுவலக உதவியாளர் வரை அனைவரும் பங்கேற்றதால் கலெக்டர், ஆர்.டி.ஓ.,- தாலுகா அலுவலகங்கள் வெறிச்சோடியது. தேர்தல் பணிகள் முடங்கின.
கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுபட போவதாகவும் வருவாய்த்துறையினர் அறிவித்தனர். இதையடுத்து முதற்கட்டமாக வருவாய்த்துறையில் சில பதவிக்கான பெயர் மாற்றக் கோரிக்கையை ஏற்று அரசாணை வெளியிடப்பட்டது.வருவாய் உதவியாளர் மற்றும் வருவாய் ஆய்வாளர் பதவியை முதுநிலை வருவாய் ஆய்வாளர் எனவும், இளநிலை வருவாய் உதவியாளர் பதவியை இளநிலை வருவாய் ஆய்வாளர் எனவும் பெயர் மாற்றப்படுகின்றன. மேலும் சம்பள விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யக் கூடாது என அரசாணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.