தேர்தல் பணியில் ஆசிரியர்களுக்கு சலுகை கோரிய மனு தள்ளுபடி
தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு சலுகைகள் வழங்குவது தொடர்பாக ஆசிரியர் சங்கம் சார்பில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்க பொது செயலாளர் கிப்சன் தாக்கல் செய்த மனுதமிழகத்தில் 45,729 வாக்குச் சாவடிகள் உள்ளன. இதில் தேர்தல் பணியில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள், கர்ப்பிணி ஆசிரியர்கள், நோயால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
பெண் ஆசிரியர்களை 25 கி.மீ., தொலைவிற்குள் வாக்குச்சாவடியில் அலுவலர்களாக நியமிக்க வேண்டும். ஆண் ஆசிரியர்களை 50 கி.மீ., தொலைவிற்குள் உள்ள வாக்குச்சாவடியில் அலுவலராக நியமிக்க வேண்டும். கணவன், மனைவி இருவரும் ஆசிரியர்களாக இருந்தால் அவர்களை அருகருகில் உள்ள வாக்குச்சாவடிகளில் நியமிக்க வேண்டும்.போக்குவரத்து வசதி இல்லாத இடங்களில் அமைந்துள்ள வாக்குச்சாவடிகளுக்கு செல்ல போக்குவரத்து வசதியை தேர்தல் ஆணையம் ஏற்படுத்த வேண்டும், என தமிழ்நாடு தலைமை தேர்தல் கமிஷனுக்கு மனு அனுப்பினோம். நடவடிக்கை எடுக்க உத்தரவிடவேண்டும். இவ்வாறு கிப்சன் மனுசெய்திருந்தார்.நீதிபதிகள் எஸ்.மணிக்குமார் சி.டி.செல்வம் கொண்ட அமர்வு விசாரித்தது. இதில் இந்திய தலைமை தேர்தல் கமிஷன் தான் உத்தரவு பிறப்பிக்க முடியும். நீதிமன்றம் தலையிட முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது, என உத்தரவிடப்பட்டது.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.