வேதியியல் விடைத்தாள் திருத்தும் பணி நிறுத்தம்
பிளஸ் 2 வேதியியல் விடைத்தாள் திருத்தும் பணி தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.கடந்த 14ம் தேதி வேதியியல் தேர்வு நடந்தது. தேர்வில் கடினமான வினாக்கள் இடம்பெற்றிருந்ததாக மாணவர்கள், ஆசிரியர்கள் தெரிவித்தனர். வினாத்தாள் கடினமாக இருந்ததால் விடைத்தாள் திருத்தும் பணியை தள்ளி வைக்க வேண்டும். மறு தேர்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.கடினமான கேள்விகளுக்கு கருணை மதிப்பெண் வழங்கவும் வலியுறுத்தி உள்ளனர். இந்நிலையில், இன்று நடக்க இருந்த வேதியியல் விடைத்தாள் திருத்தும் பணி தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் மறு தேதி அறிவிக்கப்படும், என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.---
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.