வட்டார வளமையத்தில் 'கறி' விருந்து: தேர்தல் அதிகாரிகளால் இடம் மாறியது
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே உள்ள புளியம்பட்டி வட்டார வளமையத்தில், குழந்தைகளுக்கான கற்றல் திறன் அதிகரிப்பு குறித்த மாதாந்திர கூட்டம் நடந்தது.இதில் 36 ஆசிரியர்கள் பங்கேற்றனர். இப்பகுதியில் பணிபுரியும் ஆசிரியை ஒருவரின் மகளுக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. இதனால் மற்ற ஆசிரியர்கள், 'எங்களுக்கு கறி விருந்து இல்லையா' என கேட்டதால், திண்டுக்கல்லில் உள்ள ஓட்டல் ஒன்றில் இருந்து பிரியாணிக்கு ஏற்பாடு செய்தார் ஆசிரியை.பயிற்சி வகுப்பு முடிந்து மதியம் விருந்துக்கு தயாரான போது, தகவலறிந்த தாலுகா தேர்தல் அதிகாரிகள் அங்கு வந்துவிட்டனர்.
யாரோ ஒருவர் ஆசிரியர்களுக்கு கறி விருந்து வைப்பதாக புகார் சென்றது.இதனால் அங்கு வந்த தாலுகா தேர்தல் அதிகாரிகள் விருந்து நடத்த அனுமதிக்கவில்லை. அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களிடையே விவாதம் நடந்தது. அப்போது, 'இங்கே யாரும் சாப்பிடவேண்டாம். அருகில் உள்ள வீடுகளில் வைத்து சாப்பிடுங்கள்' என அதிகாரிகள் தெரிவித்தனர்.அதன்பின், அருகில் உள்ள ஓட்டல் ஒன்றில் வைத்து கறி விருந்து பரிமாறப்பட்டது. இந்த களேபரத்திற்கு அப்பகுதியில் நிலவும் கோஷ்டி அரசியலே என்கின்றனர் ஆசிரியர்கள்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.