மார்ச் 31ல் வங்கிகள் இயங்கும்
நடப்பாண்டின் வருமான வரி உள்ளிட்ட பிற வரி இனங்களை செலுத்த ஏதுவாக, இம்மாதம், 31ம் தேதி வங்கிகள் இயக்கும்' என, ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது.வழக்கமாக, மார்ச் 31ம் தேதி, வங்கி கணக்கு முடிப்பதற்காக, பண பரிவர்த்தனை இருக்காது. ஆனால் இந்த நடைமுறையில், மூன்று ஆண்டுகளாக மாற்றம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.ஆண்டு இறுதிக் கணக்கை முடிக்க, வங்கி பரிவர்த்தனைகளை நிறுத்தினால், வருமான வரி உள்ளிட்ட பிற வரி இனங்கள் வசூல் பாதிக்கப்படுகிறது. எனவே, மார்ச், 31ல் வங்கிகள் இயங்க வேண்டும்.
ஏப்., 1ல் ஆண்டு இறுதிக் கணக்கை முடிக்கலாம் என, ரிசர்வ் வங்கி முடிவு செய்தது.இதையடுத்து, நடப்பாண்டும், மார்ச், 31ல் வங்கி பரிவர்த்தனைகள் இருக்கும். வரி உள்ளிட்ட அரசுக்கு செலுத்த வேண்டிய வரியினங்களை செலுத்தலாம். வாடிக்கையாளரின் தேவைக்கு ஏற்ப, இரவு, 8:00 மணி வரையும் வங்கிகள் செயல்படும்.ஆனால், ஏப்., 1ம் தேதி வங்கிகளில் பண பரிவர்த்தனை இருக்காது என, ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.