!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

வியாழன், 10 மார்ச், 2016

மோதலில் பள்ளி மாணவன் சாவு ஆணைய அதிகாரிகள் விசாரணை
கோழிக்கால்நத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில், மாணவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில், 4ம் வகுப்பு மாணவன் இறந்தது குறித்து, சென்னை, தேசிய ஆதிதிராவிடர் ஆணைய அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அடுத்த, கோழிக்கால்நத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில், 4ம் வகுப்பு படித்த மாணவன் சூர்யா, மாணவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் இறந்தார். சம்பவம் குறித்து, கடந்த, 7ம் தேதி மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் இந்திராகாந்தி விசாரணை நடத்தி, தலைமை ஆசிரியை கனகவள்ளியை, 'சஸ்பெண்ட்' செய்தார்.


இந்நிலையில் நேற்று, தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்தின் சென்னை பிரிவில் இருந்து, விசாரணை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு வந்து, மற்ற மாணவர்களிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, சேலத்தில் உள்ள சூர்யாவின் பெற்றோரிடம் விசாரித்து, ஆணையத்தில் அறிக்கை அளிக்க உள்ளனர்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png