இல்லங்களுக்கு இணைய இணைப்பு
சென்னை:-தமிழ்நாடு அரசு கேபிள், 'டிவி' நிறுவனம் சார்பில் செயல்படுத்தப்படும், 'இல்லந்தோறும் இணையம்' திட்டத்தை, முதல்வர் ஜெயலலிதா, நேற்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் துவக்கி வைத்தார்.'தமிழகம் முழுவதும், 'பிராட் பேண்ட்' எனப்படும்,
அதிவேக அகண்ட அலைவரிசை சேவை மற்றும் இதர இணைய சேவைகள் குறைந்த கட்டணத்தில், அரசு கேபிள் நிறுவனம் மூலம், பொதுமக்களுக்கு வழங்கப்படும்' என, சட்டசபையில், முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.அதன்படி, 'இல்லந்தோறும் இணையம்' திட்டத்தை, நேற்று அவர் துவக்கி வைத்தார்.
அத்துடன், சென்னை தரமணி, டைடல் பார்க் வளாகத்தில், 4 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள, தொழில் முனைவோர் மையம்; மாணவர்கள் மற்றும் இளம் தொழில் முனைவோருக்காக, மேகக் கணினி சார்ந்த சேவைகள் மற்றும் இணையப் பதிவேற்ற சேவைகளை, குறைந்த கட்டணத்தில் வழங்கும் திட்டத்தையும், முதல்வர் துவக்கி வைத்தார்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.