நெட்' தேர்வு தேதி அறிவிப்பு
'உதவி பேராசிரியர் பணி தகுதிக்கான மத்திய அரசின், 'நெட்' தகுதித் தேர்வு, ஜூலை, 10ல் நடக்கும்' என, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.
முதுநிலை முடித்த பட்டதாரிகள்,
கல்லுாரிகளில் உதவி பேராசிரியர் பணியில் சேர, 'நெட்' தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். இந்த தேர்வு, சி.பி.எஸ்.இ., சார்பில், ஆண்டுதோறும், இரண்டு முறை நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான, முதல் தேர்வு ஜூலை, 10ல் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு, ஏப்., 12 முதல் மே, 12 வரை, 'ஆன்லைனில்' விண்ணப்பிக்கலாம்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.