மாணவியிடம் வசூல்: திரும்ப வழங்க கல்லூரிக்கு உத்தரவு
சென்னை மாவட்ட (தெற்கு) நுகர்வோர் நீதிமன்றத்தில், கோயம்பேட்டைச் சேர்ந்த சுருதி மித்ரா தாக்கல் செய்த மனு: சென்னை, குன்றத்துாரில் உள்ள, தனியார் பல் மருத்துவ கல்லுாரியில், 2008ம் ஆண்டு, பி.டி.எஸ்., படிக்க, 75 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தினேன்.
மதுரையில் உள்ள தனியார் மருத்துவ கல்லுாரியில், எம்.பி.பி.எஸ்., படிக்க இடம் கிடைத்தது. அதனால், நான் கட்டிய பணத்தை திரும்ப கேட்டேன். கல்லுாரி நிர்வாகம் தரவில்லை.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளானேன். நான் செலுத்திய கட்டணத்தை, வட்டியுடன் திரும்ப பெற்றுத் தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. வழக்கில், நேற்று, நீதிபதிகள் ராமலிங்கம், அமலா, பால்ராஜசேகரன் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு: பல் மருத்துவ கல்லுாரி நிர்வாகம், மாணவிக்கு, 37,500 ரூபாயை திரும்ப வழங்க வேண்டும். அத்துடன் இழப்பீடாக, 15 ஆயிரம் ரூபாய்; வழக்கு செலவு, 5,000 ரூபாயை, ஆறு வாரத்திற்குள் வழங்க வேண்டும். இவ்வாறு உத்தரவிடப்பட்டது.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.