பறக்கும் படையில் மத்திய அரசு ஊழியர்கள்
அரசியல் கட்சிகள் புகாரை தொடர்ந்-து, தேர்தல் பறக்கும் படைகளில் மத்திய அரசு ஊழியர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். தேர்தல் விதிமீறலை கண்காணிக்க, ஒவ்வொரு தொகுதியிலும், தலா மூன்று பறக்கும் படைகள் செயல்-ப-டு-கின்-ற-ன. இதில் தாசில்தார், போலீஸ் எஸ்.ஐ., மற்றும் போலீசார் இரு-வர் உள்ளனர். ஒவ்வொரு பறக்கும் படைக்கும், 8 மணி நேரம் பணி கொடுக்கப்பட்டது. இவற்-றின் செயல்பாடுகள் ஜி.பி.எஸ்., கருவி மூலம் கண்காணிக்கப்படுகின்றன.பறக்கும் படையில் இருக்கும் தமிழக அரசு ஊழியர்கள், ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்படுவதாக, எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்தன. இதையடுத்து, ஒவ்வொரு பறக்கும் படையிலும், 'பி' பதவி நிலையிலான மத்திய அரசு ஊழியர் ஒருவர் நியமிக்கப்பட்டு வருகிறார். பறக்கும் படையில் மத்திய ரிசர்வ் போலீசாரும் நியமிக்கப்பட உள்ளனர்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.