தலைமையாசிரியர்களுக்குசி.இ.ஓ., பதவி உயர்வு:பொதுக் குழுவில் தீர்மானம்
மதுரையில் தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கழக மாநில பொதுக் குழுக் கூட்டம் நடந்தது.மாநில தலைவர் பொன்முடி தலைமை வகித்தார். பொது செயலாளர் ரமேஷ், பொருளாளர் சண்முகநாதன், அமைப்பு செயலாளர் கனகராஜ் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் அனந்தராமன் வரவேற்றார்.பதவி உயர்வு பிரச்னைக்கு தீர்வு காண கருணாகரன் சீராய்வுக் குழு அறிக்கையை நடைமுறைப்படுத்த வேண்டும். உயர்நீதிமன்றம் மதுரை கிளை பிறப்பித்த உத்தரவுப்படி மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் (சி.இ.ஓ.,) பதவி உயர்வு அளிக்க வேண்டும். பள்ளிகள் மீண்டும் திறப்பதற்குமுன் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தி காலிப் பணியிடங்களை நிரப்ப கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.