தி.மு.க.,வுக்கு ஆதரவு திரட்டிய 15 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்
தேர்தல் பயிற்சி வகுப்பில், தி.மு.க.,வுக்கு ஆதரவு திரட்டிய ஆசிரியர்களுக்கு, விளக்கம் கேட்டு கல்வித்துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினர். வேலூர் மாவட்டம், திருப்பத்தூர், வாணியம்பாடி, நாட்றம்பள்ளி, ஜோலார்பேட்டை ஆகிய தொகுதிகளில், தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம், நாட்றம்பள்ளி அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் நேற்று முன்தினம் நடந்தது.
இதில், 1,200 ஆசிரியர்கள் பங்கேற்றனர். பயிற்சி முடிந்து மாலை, 6 மணிக்கு அவர்கள் வெளியே சென்றனர். அப்போது, திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த ஆசிரியர்கள் சிலர், திருப்பத்தூர் தி.மு.க., வேட்பாளர் நல்லதம்பிக்கு ஆதரவு திரட்டி, துண்டு பிரசுரங்களை வழங்கினர். தகவல் அறிந்த நாட்றம்பள்ளியை சேர்ந்த அ.தி.மு.க., வினர், அங்கு வந்து தி.மு.க.,வுக்கு ஆதரவு திரட்டிய ஆசிரியர்களிடம் வாக்குவாதம் செய்தனர். பின், தேர்தல் நடத்தும் அதிகாரியும், நாட்றம்பள்ளி தாசில்தாருமான ராஜேந்திரனிடம் புகார் செய்தனர். இதற்கிடையே, வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பூபதி, நேற்று சம்பவம் நடந்த பள்ளிக்கு சென்று விசாரணை செய்தார். அதில், தி.மு.க., வேட்பாளரை ஆதரித்து துண்டு பிரசுரங்கள் கொடுத்த ஆசிரியர்கள் குறித்த விவரங்கள் சேகரித்து, 15 ஆசிரியர்களுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இதில், 1,200 ஆசிரியர்கள் பங்கேற்றனர். பயிற்சி முடிந்து மாலை, 6 மணிக்கு அவர்கள் வெளியே சென்றனர். அப்போது, திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த ஆசிரியர்கள் சிலர், திருப்பத்தூர் தி.மு.க., வேட்பாளர் நல்லதம்பிக்கு ஆதரவு திரட்டி, துண்டு பிரசுரங்களை வழங்கினர். தகவல் அறிந்த நாட்றம்பள்ளியை சேர்ந்த அ.தி.மு.க., வினர், அங்கு வந்து தி.மு.க.,வுக்கு ஆதரவு திரட்டிய ஆசிரியர்களிடம் வாக்குவாதம் செய்தனர். பின், தேர்தல் நடத்தும் அதிகாரியும், நாட்றம்பள்ளி தாசில்தாருமான ராஜேந்திரனிடம் புகார் செய்தனர். இதற்கிடையே, வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பூபதி, நேற்று சம்பவம் நடந்த பள்ளிக்கு சென்று விசாரணை செய்தார். அதில், தி.மு.க., வேட்பாளரை ஆதரித்து துண்டு பிரசுரங்கள் கொடுத்த ஆசிரியர்கள் குறித்த விவரங்கள் சேகரித்து, 15 ஆசிரியர்களுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.