!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

செவ்வாய், 7 ஜூன், 2016

போலி சான்றிதழ் கொடுத்தஆசிரியைக்கு 3 ஆண்டு சிறை
போலி சான்றிதழ் கொடுத்து, பணியில் சேர்ந்த ஆசிரியைக்கு, மூன்று ஆண்டு சிறை தண்டணை விதித்து, அரியலுார் கோர்ட் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.


அரியலுாரை சேர்ந்தவர் தனபால் மனைவி ராஜாமணி, 36. இவர், 2000ம் ஆண்டு, மணக்கால் ஆதிதிராவிடர் துவக்கப் பள்ளியில் ஆசிரியர் பணியில் சேர்ந்தார். பின், அரியலுார் ஆதிதிராவிடர் நல தனி தாசில்தார் துரை, ராஜாமணியின் கல்வி சான்றிதழை சரிபார்த்த போது, அவை போலியானது என்று தெரியவந்தது.

இதுகுறித்து, அவர் அரியலுார் போலீசில் கொடுத்த புகாரின்படி, போலீசார் வழக்கு பதிந்து, அரியலுார் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி மகாலெட்சுமி, நேற்று தீர்ப்பளித்தார். அதில், போலி சான்றிதழ்கள் கொடுத்து பணியில் சேர்ந்ததற்காக, ராஜாமணிக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டணை விதித்து தீர்ப்பளித்தார். பின், ராஜாமணி ஜாமினில் விடுதலையானார்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png