விரைவில் ஆசிரியர் இடமாற்ற கலந்தாய்வு: அமைச்சர் வீரமணி
ஆசிரியர் இடமாற்ற கலந்தாய்வு விரைவில் நடைபெறும் என்று வணிகவரித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார்.
ஆளுநர் உரை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை தேவை. ஆசிரியர் இடமாற்ற கலந்தாய்வையும் வெளிப்படைத் தன்மையுடன் நடத்த வேண்டும் என்று கூறினார்.
அப்போது அமைச்சர் கே.சி.வீரமணி குறுக்கிட்டு கூறியது: மு.க.ஸ்டாலின் வெளிப்படைத் தன்மை நிர்வாகத்தைப் பற்றி பேசுகிறார். ஆசிரியர் இடமாற்றத்துக்குக் கலந்தாய்வு முறையை முதலில் கொண்டு வந்ததே அதிமுக அரசுதான். கலந்தாய்வு நடத்துவதற்கான ஆய்வை நடத்தி வருகிறோம். விரைவில் ஆசிரியர் இடமாற்ற கலந்தாய்வு நடத்தப்படும்.
துரைமுருகன்: பள்ளிகளுக்கு மாணவர்களுக்கு சென்று வருகின்றனர். இன்னும் கலந்தாய்வு நடைபெறவில்லை என்பது வேதனை அளிக்கிறது.
அமைச்சர் வீரமணி: இப்போதுதான் அரசு புதிதாக பொறுப்பேற்றுள்ளது. அமைச்சர் புதியவர். கலந்தாய்வு தொடர்பாக ஆய்வு நடைபெறுகிறது. விரைவில் கலந்தாய்வு நடத்தப்படும் என்றார் அவர்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.