எம்.பி.பி.எஸ்., விண்ணப்பம்இன்றே கடைசி நாள்
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான விண்ணப்பம் பெற இன்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 23 ஆயிரத்து 550 பேர் விண்ணப்பங்கள் பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் அரசு, சுயநிதி கல்லுாரிகள், இ.எஸ்.ஐ., கல்லுாரியையும் சேர்த்து மாநில ஒதுக்கீட்டிற்கு 2,788 எம்.பி.பி.எஸ்., இடங்களும், 1,055 பி.டி.எஸ்., இடங்களும் உள்ளன. இதற்கு மே 26 முதல் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.விடுமுறை நாளான நேற்றும் விண்ணப்பங்கள் தரப்பட்டன. இதுவரை 23 ஆயிரத்து 550 பேர் விண்ணப்பங்கள் பெற்றுள்ளனர். மாணவர்கள் விண்ணப்பங்கள் பெற இன்று கடைசி நாள்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.