டீ கடை பெஞ்ச்
பார்கோடு வேலையை, தனியாரிடம் குடுக்கலைன்னு, தேர்வுத் துறைல சொல்லியிருக்காவ வே...'' என, அடுத்த மேட்டரை துவக்கினார் அண்ணாச்சி.
''எக்சாம் பேப்பர் சம்பந்தமான விவகாரமா... சொல்லுங்க...'' என்றார் அந்தோணிசாமி.
''பார்கோடு பணிகளை, தனியார்ட்ட குடுத்துருக்காவன்னு, 13ம் தேதி பேசியிருந்தோம்லா... அதுக்கு தேர்வுத் துறை பதில் குடுத்துருக்கு... 'பார்கோடு அச்சழுத்தப் பணியை, தனியார்ட்ட குடுக்கலை... அரசுத் தகவல் தொகுப்பு மையத்துல தான் செய்றோம்'னு சொல்லியிருக்கு வே...
''ஆனா, பார்கோடு அச்சழுத்தம் பத்தி, நாம பேசலை வே... பார்கோடுக்குள்ள இருக்குற பதிவு எண் தயாரிக்குறது தான் முக்கியமான வேலை... அந்த பதிவு எண்ணை, ஆன்-லைன்ல தயாரிக்காவ... இதுக்கு தான், அந்த தனியார், 'லேப்' ஆட்கள் ஒத்தாசையா இருந்தாவன்னு, தேர்வுத் துறைல பேசிக்காவன்னு சொன்னோம்... இது தேர்வுத் துறைக்கு புரியலே போலிருக்கு வே...'' என்றார் அண்ணாச்சி.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.