இலவச பஸ் பாஸ் பெறுவதில் மாணவர்களுக்கு ஆர்வமில்லை?
விருதுநகர்: இலவச பஸ் பாஸ் கோரி மாணவர்கள் மிக குறைந்த எண்ணிக்கையில் விண்ணப்பித்துள்ளதால் பள்ளி கல்வித்துறை அதிர்ச்சியடைந்துள்ளது. தமிழகத்தில் ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவர்களுக்கு 2015-16க்கான இலவச பஸ் பாஸ் விண்ணப்பங்களை போக்குவரத்து கழகங்களுக்கு அனுப்பி வைக்குமாறு தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்தது. கடந்த 15 நாட்களில் 8 லட்சத்து 32 ஆயிரம் விண்ணப்பங்கள் மட்டுமே தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. முந்தைய கல்வியாண்டில் தமிழகம் முழுவதும் மாணவர்களுக்கு 20 லட்சத்து 12 ஆயிரம் இலவச பஸ் பாஸ்கள் வழங்கப்பட்டிருந்தன. இந்த எண்ணிக்கையில் பாதியளவு கூட விண்ணப்பங்கள் வராததால் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.
|
.
புதன், 17 ஜூன், 2015
Facebook Comments
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.