ஆசிரியர்கள் மோதல்
நெல்லை மாவட்டம் கரிவலம்வந்த நல்லுார் அரசு மேல்நிலைப்பள்ளியில், ஆசிரியர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் தாக்கப்பட்டார்.சங்கரன்கோவில் அருகே கரிவலம்வந்தநல்லுார் அரசு மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் கருப்பையா, ஆங்கில ஆசிரியர் முத்துப்பாண்டியன். இவர்களிடையே முன்விரோதம் உள்ளது. நேற்று முன்தினம் கருப்பையா,39, 11ம் வகுப்பில் பாடம் நடத்திக்கொண்டிருந்தார். அது ஆங்கில ஆசிரியருக்கான வகுப்பு நேரமாம். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமுற்ற முத்துப்பாண்டியன், கருப்பையாவை செருப்பால் அடித்தார். தகாத வார்த்தைகளால் திட்டினார்.கருப்பையா புகாரின் பேரில் கரிவலம்வந்த நல்லுார் போலீசார், முத்துப்பாண்டியன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
நெல்லை மாவட்டம் கரிவலம்வந்த நல்லுார் அரசு மேல்நிலைப்பள்ளியில், ஆசிரியர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் தாக்கப்பட்டார்.சங்கரன்கோவில் அருகே கரிவலம்வந்தநல்லுார் அரசு மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் கருப்பையா, ஆங்கில ஆசிரியர் முத்துப்பாண்டியன். இவர்களிடையே முன்விரோதம் உள்ளது. நேற்று முன்தினம் கருப்பையா,39, 11ம் வகுப்பில் பாடம் நடத்திக்கொண்டிருந்தார். அது ஆங்கில ஆசிரியருக்கான வகுப்பு நேரமாம். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமுற்ற முத்துப்பாண்டியன், கருப்பையாவை செருப்பால் அடித்தார். தகாத வார்த்தைகளால் திட்டினார்.கருப்பையா புகாரின் பேரில் கரிவலம்வந்த நல்லுார் போலீசார், முத்துப்பாண்டியன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.