''பள்ளிக்கல்வித் துறை இயக்குனர்கள், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிக்கும், மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கும், அரசுத் திட்டங்கள் மற்றும் பள்ளி செயல்பாடு குறித்து, அப்பப்போ, 'சர்குலர்' அனுப்புவாங்க... இது, ரொம்ப தாமதமாகத் தான் போய் சேருதுங்க... சில அறிக்கைகள், பாதியிலேயே குப்பைக்கு போயிருதுங்க...
''சமீபத்தில், தீபாவளிக்கு பாதுகாப்பா பட்டாசு வெடிப்பது எப்படின்னு, மாணவர்களுக்கு அறிவுறுத்தணுமுன்னு, ஒரு சர்குலர் அனுப்பியிருக்காங்க... அது, பல மாவட்ட அதிகாரிகளுக்கு, தீபாவளிக்கு முதல் நாள் சாயங்காலம் தான் போயிருக்குங்க...
''இதுல என்ன கொடுமைன்னா, சில பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, தீபாவளி முடிஞ்ச மறுநாள் தான், அந்த சர்குலர் கிடைச்சிருக்குங்க...'' என விவரித்தார் அந்தோணிசாமி.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.