!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

செவ்வாய், 15 டிசம்பர், 2015

பள்ளிகளுக்கு குண்டு மிரட்டல்
மதுரை அண்ணாநகரில் உள்ள பள்ளி, கல்லுாரிகளுக்கு குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.நகர் போலீஸ் கன்ட்ரோல் ரூமிற்கு நேற்று காலை 8:30 மணிக்கு பேசிய நபர், 'நான் தெப்பக்குளத்தில் இருந்து பேசுகிறேன். அண்ணாநகரில் உள்ள பள்ளியில் காலை 9 மணிக்கு குண்டு வெடிக்கும்' எனக்கூறி இணைப்பை துண்டித்தார்.எந்த பள்ளி என்று சொல்லாததால், அண்ணாநகரில் உள்ள பள்ளிகள், கல்லுாரிகளில் போலீசார் சோதனையிட்டனர். எதுவும் சிக்கவில்லை. மிரட்டலை தொடர்ந்து, பல பெற்றோர் தங்கள் பிள்ளைகளை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். பள்ளி, கல்லுாரிகள் தொடர்ந்து செயல்பட்டன.


போலீசார் கூறுகையில், ''அரையாண்டு தேர்வு ஒத்தி வைக்கப்பட்டதை தொடர்ந்து, சிறப்பு மாதிரி தேர்வு நேற்று துவங்கியது. இதை தடுப்பதற்காக மாணவர் யாராவது மிரட்டியிருக்கலாம் என சந்தேகம் உள்ளது'' என்றனர்.இருமுறை மிரட்டல்மதுரைக்கு இந்தாண்டு இருமுறை குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அக்.,5ல் பிரசன்ன வெங்கடேஸ்வர மெட்ரிக் பள்ளிக்கும், அக்.,10ல் மதுரை சிறைக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டது.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png