கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம் கல்லூரி கல்வி இயக்குனரகம் முற்றுகை
தமிழகத்திலுள்ள, 83 அரசு கலைக் கல்லுாரிகளில், 3,445 கவுரவ விரிவுரையாளர்கள், 12 ஆண்டுகளாக பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு, மாத ஊதியமாக, 10 ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது. பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு கோரி, கவுரவ விரிவுரையாளர்கள், நேற்று முதல், தொடர் முற்றுகை போராட்டத்தை துவங்கியுள்ளனர்.
தமிழ்நாடு கவுரவ விரிவுரையாளர் நலச் சங்கத்தைச் சேர்ந்த, நுாற்றுக்கணக்கானோர், நேற்று, சென்னை, டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள கல்லுாரி கல்வி இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து, ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்; வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.போராட்டம் குறித்து, மாநிலச் செயலர் அருணகிரி, வேலுார் மண்டலத் தலைவர் தங்கராஜ், மதுரை மண்டலத் தலைவர் மோகன் மற்றும், 'நெட், ஸ்லெட்' சங்கத் தலைவர் தங்க முனியாண்டி ஆகியோர் கூறியதாவது:
பல்கலை மானியக் குழுவின் பரிந்துரைப்படி, கவுரவ விரிவுரையாளர்களுக்கு, மாதம், 25 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும்; தற்போதுள்ள, 10 மாத சம்பளம்
என்பதை மாற்றி, 12 மாதங்களுக்கும் தர வேண்டும்.அண்ணாமலை பல்கலையில் இருந்து வெளியேற்றப்படும், 700 பேராசிரியர்களை, விதிகளை பின்பற்றாமல், அரசு கல்லுாரிகளில் நியமனம் செய்யக் கூடாது. அவர்களுக்கு பதில், காலியிடங்களில், கவுரவ விரிவுரையாளரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்; அதுவரை, எங்கள் போராட்டம் தொடரும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.