ஆங்கிலம் தேர்வு: 9 மாணவர் மீது முறைகேடு புகார்
பிளஸ் 2 ஆங்கிலம் முதல் தாள் தேர்வில், ஒன்பது பேர் தேர்வு முறைகேடு புகாரில் சிக்கினர். இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குனரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், 'ஆங்கிலம் முதல் தாள் தேர்வில், ஒன்பது தேர்வர்கள் முறைகேடு புகாரில் சிக்கினர். கரூர், அரியலுார், கடலுார் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் தலா, ஒரு பள்ளி மாணவர்; கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் தலா, ஒரு தனித்தேர்வர்; சென்னையில், மூன்று தனித்தேர்வர்கள் சிக்கினர்' என, கூறப்பட்டுள்ளது.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.