!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

செவ்வாய், 8 மார்ச், 2016

மாணவன் இறந்த சம்பவம்:த.ஆசிரியை 'சஸ்பெண்ட்'
திருச்செங்கோடு அருகே, தொடக்க பள்ளி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், ஒரு மாணவர் இறந்த நிலையில், பள்ளியின் தலைமை ஆசிரியை, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அடுத்த, கொல்லப்பட்டியைச் சேர்ந்த பழனிசாமி - பாப்பாத்தி தம்பதியின் மகன் சூர்யா, 9; இவர், கோழிக்கால்நத்தம் ஊராட்சி தொடக்க பள்ளியில், 4ம் வகுப்பு படித்து வந்தார்.அதே வகுப்பில், மாணவர் சூர்யாவுடன் படித்த சக மாணவர்கள், இரண்டு பேர், கடந்த, 29ம் தேதி, சூர்யாவுடன் ஏற்பட்ட பிரச்னையில், அவரை தாக்கி உள்ளனர். சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சூர்யா, 5ம் தேதி உயிரிழந்தார்.


சூர்யாவை தாக்கிய, இரண்டு மாணவர்களை, திருச்செங்கோடு போலீசார் கைது செய்து, சேலம் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.இந்நிலையில், நாமக்கல் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் இந்திராகாந்தி தலைமையில், நேற்று பள்ளிக்கு சென்ற குழுவினர், விசாரணை நடத்தினர்.பின், மாணவர்களை கவனிக்காமல் மெத்தனமாக பணியாற்றியது, சம்பவம் குறித்து, மாவட்ட கல்வித்துறையின் கவனத்துக்கு கொண்டு செல்லாமல் மூடி மறைத்தது போன்ற காரணங்களுக்காக, பள்ளி தலைமையாசிரியை கனகவல்லி, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png