ஜூலை 11 முதல் வேலைநிறுத்தம் மத்திய அரசு ஊழியர்கள் அறிவிப்பு
ஏழாவது ஊதியக் குழு பரிந்துரையை நிறைவேற்றக் கோரி, ஜூலை, 11 முதல், காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம்' என, மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து, சம்மேளனத்தின் பொதுச்செயலர் துரைபாண்டியன் கூறியதாவது:
ஏழாவது ஊதியக் குழு, 2015 நவ., 19ம் தேதி, ஊதிய உயர்வு தொடர்பான பரிந்துரைகளை மத்திய அரசிடம் அளித்தது. ஆறு மாதங்களாகியும், பரிந்துரையின் மீது, மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. பரிந்துரைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனக் கோரி, ஜூலை, 11 முதல், காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம்.
மத்திய அரசுடன் நடந்த பேச்சில், ஊழியர் சங்கங்களின் அடிப்படை கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை வாபஸ் பெற, மத்திய அரசு மறுத்து விட்டது. எனவே, காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதைத் தவிர, ஊழியர்களுக்கு வேறு வழியில்லை. பாதுகாப்பு, தபால், கணக்காயர், வருமான வரி, கலால், சுங்கத் துறைகளின் ஊழியர்கள், கல்பாக்கம் அணு ஆராய்ச்சி நிலைய பணியாளர்களும், இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.